திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலானது பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்றதும், பூலோக வைகுந்தம் எனவும், போக மண்டபம் எனவும் 108 வைணவ திருக்கோயில்களில் முதன்மையானதுமாகத் திகழ்கிறது. இத்திருக்கோயில் ஏழு திருச்சுற்றுகளையும், 52 உப சன்னதிகளும், ஓம் என்னும் பிரணவ வடிவிலான தங்க விமானம், தெற்கு ஆசியாவிலேயே 236 அடி உயரமான இராயகோபுரம் உள்பட 21 கோபுரங்களுடனும் உள்ள 156 ஏக்கர் பரப்பளவுள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் இருபுறமும் கங்கையை விட புனித ஆறான காவேரி ஆற்றினால் சூழப்பட்ட திருநாவலந்தீவு என்ற தீவு பகுதியில் அமைந்துள்ளது. வருடத்தின் அநேக நாட்களைத் திருவிழாக்களைக் கொண்ட மிகச் சிறப்புமிக்க திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் பாஞ்சராத்திர ஆகமம் பாரமேஸ்வர சம்ஹிதைபடி பூசை முறைகள் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில்...
| 06:00 AM IST - 12:00 PM IST | |
| 12:00 PM IST - 09:00 PM IST | |
| 07:15 AM IST - 09:00 AM IST | |
| 12:30 PM IST - 02:15 PM IST | |
| 05:30 PM IST - 07:00 PM IST | |
| சாதாரண நாட்களில் மேற்கூறிய நேரங்களில் தரிசனம் மற்றும் அர்ச்சனை செய்யப்படுகிறது. திருவிழாக் காலங்களில் மேற்படி பூஜா காலம் மற்றும் சேவை நேரம் மாறுதலுக்கு உட்பட்டது. குறிப்பு: 01.04.2026 அன்று மூலஸ்தான சேவை இல்லை (மூலவர் மற்றும் தாயார் சன்னதி) - பங்குனி திருவிழாக்கள் குறிப்பு: 02.04.2026 அன்று மூலவர் தரிசனம் தேர் நிலை சேர்ந்தவுடன் பிறகு அறிவிக்கப்படும் பங்குனி திருவிழாக்கள்) குறிப்பு: தரிசனம் நேரம் நிறைவு பெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பக்தர்கள் இருக்க வேண்டும். | |